துன்பங்களை சாதரணமாக எடுத்துகொள்ள செய்யும் தியானம்

துன்பங்கள் இல்லாத மனிதர்கள் உண்டென்று இந்த உலகத்தில் யாரவது உண்டா? இருக்கலாம் மயானத்தில் அமைதியாக உறங்கிகொண்டிருக்கும் நல்ல மனிதர்கள்தான்.

ஏனென்றால் அவர்களுக்குதான் இன்பம், துன்பம் எதுவுமே தெரியாது.

இந்த இன்பங்களும் துன்பங்களும் மனிதர்களாக ஏற்படுத்திகொண்ட ஒரு மாயையான சிந்தனையாகும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஏதாவது உருவம் இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை என்ற பதில் தான் சரியானதாக இருக்கும்.

நடக்கும் நிகழ்ச்சிகள் தனக்கு சாதகமாக இருந்தால் அதை இன்பம் என்றும், பாதகமாக இருந்தால் துன்பம் என்றும் ஒருவர் செயற்கையாக, மனதின் தவறான உந்துதலில் அல்லது மனதின் தவறான சிந்தனையானால் எடுத்து கொள்கிறார். எனவே ஒருவர் துன்பம் என்று தன்னை மனதாலும் உடலாலும் கஷ்டபடுத்தி கொள்கிறார் என்றால் அது மனம் சார்ந்த பிரச்னை அல்லது சிந்தனை என்று அடித்து கூறலாம். இந்த மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மனதை சரியாக சிந்திக்க செய்வதுதான். அதற்க்கு ஒரே தீர்வு தியானம்தான். தியானத்தின் மூலம் மூளையினுடைய அலைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு எது உண்மை, எது போலி என்று சிந்திக்க செய்யும். அப்படி சிந்திக்கும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற மாயைகளுக்கு வேலை இல்லை.

துன்பங்கள் என்று மனிதன் நினைத்து கொண்டு இருக்கும் செயல்கள் எதுவும்  நிரந்திரம் அல்ல.  அதே போன்று இன்பம் என்று மனிதர்கள் நினைத்து கொண்டு இருக்கும் எந்த செயல்களும் நிரந்திரம் அல்ல. இதை எப்போது உணருவோம் என்றால் மனது தெளிவாக அல்லது சரியாக சிந்தனை செய்யும்போதுதான்.

இந்த  உலகத்தில் எல்லா செயல்களுமே இரட்டை இரட்டையாகத்தான் இருக்கும். இதை ஒரு இயற்கையின் விதி என்று சொல்லலாம்.  மின்சாரத்தை எடுத்து கொண்டீர்கள் என்றால் அதில் positive negative என்ற விதியின் அடிப்படையில்தான் ஒலி, ஒளி கிடைக்கிறது. அதுபோன்று வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்ற இரண்டும் இருந்தால்தான் வாழ்க்கை என்ற ஒளி விளக்கு பிரகாசமாக எரிய முடியும்.

குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒத்து சென்றால்தான் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கும். இங்கும் இரட்டை விதிதான்.

பூஜ்யமும் ஒன்றும் சேர்த்தால்தான் இந்த உலகில் எந்த computer ம் இயங்க முடியும். பூஜ்யமும் ஒன்றும் சேரும்போதுதான் அங்கு கம்ப்யூட்டர் இயங்குவதற்கு binary என்ற concept உருவாகிறது. இங்கும் இரட்டை விதிதான்.

முடியாது என்ற சொல் இருந்தால்தான் முடியும் என்ற வைராக்கியமே பிறக்கும்.  இங்கும் இரட்டை விதிதான்.

இந்த உலகத்தில் உள்ள மிக பெரிய பணக்காரகளின் ஆரம்ப கால வாழ்க்கையை பார்த்தால் அவர்களில் பெரும்பாலானோர் பிறக்கும்போதே பணக்காரர் ஆக பிறக்க வில்லை. உண்ணும் உணவுக்கும், உடுக்கும் ஆடைக்கும் வழியே இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும் நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கைதான் அவர்கள் இன்றும் பணக்காரர்களாக இருக்கின்றனர்.

அம்பானி சகோதரர்களின் தந்தையார் தன்னுடைய இள வயதில் துறைமுகங்களில் மூட்டை தூக்கித்தான் சம்பாதித்து இருக்கின்றார். மறைந்த முதல் அமைச்சர் திரு. M.G.R  அவர்கள் தன்னுடைய இள  வயதில் உணவின்றி
பல நாட்கள் இருந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிற்காலத்தில் திரைப்பட துறையில் யாரும் சாதிக்காத அளவிற்கு சம்பாதித்து பணக்காரராகவே இறந்து போனார். இன்றைய superstar திரு. ரஜினி காந்த் பெங்களூர் போக்குவரத்து துறையில் conductor ஆக இருந்தவர்தான். இன்று அவரிடம் இல்லாத பணம் இல்லை.

இவர்கள் யாரும் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை ஒரு பொருட்டாக அல்லது துன்பமாக எடுத்து கொண்டிருந்தால் அவர்கள் பிற்காலத்தில் பெரிய பணக்காரர் ஆக இருந்திருக்க முடியாது அல்லது இருக்க முடியாது.

"வாழுகின்ற மனிதர்களுக்கு வாழ்ந்தவர்கள்தான் நல்லதொரு உதாரணம்"    

எனவே துன்பம் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வியாதி என்றுதான் சொல்லவேண்டும். இந்த வியாதியை குணபடுத்தும் மருத்துவர் உங்களுக்குள் தான் இருக்கின்றார். துன்பம் என்னும் வியாதியை தியானம்
என்னும் மருந்து கொண்டுதான் அந்த மருத்துவர் குனபடுத்துவார்.

தியானத்தின் மூலம் மனது சரியாக சிந்திக்க முடியும்.                   
மனது சரியாக சிந்திக்க செய்யும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற பாகு பாடு இல்லை. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும். எனவே தேவையில்லாத விருப்பு, வெறுப்பு, எல்லா நிகழ்வுகளையும் சாதரணமாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை தியானம் செய்வதின் மூலம் வரும் என நம்பலாம். 
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள