வேலையிலும் தொழிலும் வெற்றி பெற உதவி புரியும் தியானம்.

 பொதுவாக தான் வேலை செய்யும் இடத்திலும் சரி அல்லது தான் செய்யும் தொழிலும் சரி ஜெயிக்க வேண்டும் என்றால் அவர்கள் பார்க்கும் வேலையிலும் அல்லது தொழிலும் முழு விருப்பத்துடன் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்யும்போது புதிய புதிய யுக்திகள் மனதினில் உருவாகி அதனை தான் செய்யும் வேலையிலும்  தொழிலும் புகுத்தும்போது மேல் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு, பதவி உயர்வு பெற்று பொருளாதரத்தில் மேன்மை அடைகின்றனர்.  தான் பார்க்கும்  தொழிலில் நல்ல மேன்மை அடைந்து அபரீத லாபம் சம்பாதிக்கின்றனர்.

ஒரு வேலையில் அல்லது தொழிலில் முழு விருப்பத்துடன் பணியாற்ற நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் வேலை அல்லது தொழில் உங்களுக்கு மிகவும் விருப்பம் உள்ள வேலை அல்லது  தொழில் ஆக   வேண்டும். அப்போதுதான் அந்த வேலை அல்லது தொழிலில் உங்களையும் அறியாமல் ஒரு ஆர்வம்  உண்டாகும். ஆர்வம்  உண்டாகும் போது உற்சாகம் உண்டாகும். உற்சாகம் உண்டாகும்போது புது புது யுக்திகள் உருவாகும். புது யுக்திகளை உபயோகிக்கும் போது பாராட்டுதல்களும் பண வரவும் அதிகமாகின்றது.

உங்களுடைய சரியான விருப்பம் என்னவென்று தெரிந்துவிட்டால் அதை அடைந்து விட முடியும் என்று கடுமையான நம்பிக்கை வையுங்கள்.
நம்பிக்கையுடன் உங்கள் விருப்பத்தை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். இதற்க்கு உங்கள் மனதும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதற்க்கு தியானம் என்னும் கலையின் மூலம் உங்கள் மனதை தயார் செய்யலாம்.

நீங்கள் முழுமனதுடன் ஒரு வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு வெற்றியடைய வேண்டும் என்றால் உங்களுடைய இலக்கு என்னவென்று தெரிய வேண்டும். இலக்கு என்ன வென்று தெரியாமல் ஒரு வேலையில்  முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றியடைய முடியாது. இலக்கு தெரிய வில்லை என்றால் தோல்விதான் மிஞ்சும். உங்கள் இலக்கை சரியான முறையில் அடைந்து நீங்கள் ஈடுபட்டிருக்கும் வேலை அல்லது தொழிலில் முழு மனதுடன் பணியாற்ற உங்கள் மனம் உங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
உங்கள் மனது ஒத்துழைப்பு தர தியானம் உதவும்.

முழுமனதுடன் ஒரு வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு நம்பிக்கையும் விடா முயற்சியும் அவசியம். நம்பிக்கையையும் விடா முயற்சியையும் உங்கள் மனது உங்களுக்கு தர வேண்டும். நம்பிக்கையும் விடா முயற்சியும் தர மனதிற்கு தியானம் உதவி செய்கின்றது.

தியானத்தின் மூலம் நம்பிக்கை உங்கள் மனதில் விதிக்கபடுகிறது. இந்த நம்பிக்கை நீங்கள் ஈடுபட்டுள்ள வேலையிலும் தொழிலும் உங்களை முழு மனதுடன் பணியாற்ற செய்கின்றது.

தியானம் உங்கள் மனதினை எப்போதும் நல்லதை மட்டும் நினைக்க செய்யும், தீயவைகளை மறக்க செய்யும். தீயவைகளை மனதிற்குள் எடுத்து செல்லாது.
நம்பிக்கையை மட்டும்தான் தியானம் மனதில் விதைக்கும் அவநம்பிக்கையை வேரோடு அறுத்து எடுத்து விடும்.

எனவே தியானம் என்னும் கலை உங்கள் மனதை உங்களுக்கு சாதகமாக்கி நீங்கள் ஈடுபட்டுள்ள வேளையிலும் தொழிலும் உங்களை முழு மனதுடன் பணியாற்ற செய்து உங்கள் மேல் அதிகாரிகளிடத்து பாராட்டுதலை பெற செய்கின்றது. நீங்கள் ஈடுபட்டு இருக்கும் தொழிலில் புதுமைகளை புகுத்தி லாபத்தை அதிகரிக்க செய்கிறது.      
            
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள